இக் கல்லூரியைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்
அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் (BIA) கல்லூரி என்பது அல் பாஸியத்துஷ் ஷாதுலியா தரீக்காவின் ஒழுங்கில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஓர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியாகும். இது இலங்கையில் யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க காலிக்கோட்டையில் அமைந்துள்ளது. இக்கல்லூரி நாட்டின் மிகப் பழமைவாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாகும்.
இக் கல்லூரியின் வரலாறு
இக்கல்லூரி 1892 (ஹிஜ்ரி 1310) இல் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கல்வி கற்க இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம் அறிஞர்கள் வருகை தந்திருக்கின்றார்கள். இக்கல்லூரி இலங்கையில் இஸ்லாமிய கற்கைகளின் முன்னேற்றத்திற்கு பல வருடங்களாக எண்ணிலடங்காத பங்களிப்பை வழங்கியுள்ளது.
இக்கல்லூரி காலிக்கோட்டை ஸாவியா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு 34 வருடங்கள் அங்கேயே கல்விக் கற்றுக் கொடுக்கப்பட்டது. 1928 இல், பள்ளி வீதியில் (Church St) உள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது, இது 1927 இல் O.L.M மாக்கான் மார்க்கார் குடும்பத்தால் வாங்கப்பட்டு இக்கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கடந்த 131 ஆண்டுகளில் இக்கல்லூரி நானூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியுள்ளது.
இக்கல்லூரியை உருவாக்கியவரைப் பற்றி ஓர் நோக்கு
இருட்டறையில் இருந்த இலங்கை வாழ் முஸ்லிம்களை தன் எண்ணத்தாலும் தன் செல்வத்தாலும் வெளிச்சம் என்னும் தோற்றத்திற்குக் கொண்டுவந்த மர்ஹூம் O.L.M மாக்கான் மார்க்கார் அவர்களின் மனைவி மர்ஹூமா ஆமினா உம்மா அவர்களால் BIA கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆமினா உம்மா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் புதையல் என்று கூறலாம். அவர்கள் ஒர் அர்ப்பணிப்புள்ள மனைவியாகவும், அன்பான தாயாகவும் வாழ்ந்துகாட்டினார்கள், அவர்கள் தனது குழந்தைகளுக்கு மார்க்கப் பற்றையும் மார்க்கக் கல்விகளையும் செம்மையாக போதித்தார்கள். அதுமட்டுமின்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவியாகவும், ஏழை எளியோருக்கு உதவி செய்யும் மனப்பாங்குடைய ஓர் சீமாட்டியாகவும் திகழ்ந்தார்கள்.
மர்ஹூமா ஆமினா உம்மா அன்றைய முஸ்லிம் அறிஞர்களின் பற்றாக்குறைகளைக் கண்டு முஸ்லிம் அறிஞர்களை உருவாக்கி தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் உயர் இஸ்லாமிய கல்வி கலாபீடம் தேவை என்பதை உணர்ந்தபோது, அவர்கள் தனது எண்ணத்தையும் , நேரத்தையும் , செல்வத்தையும் செலவழித்து BIA கல்லூரியை உருவாக்கி பின்னர் இலங்கையின் இஸ்லாமிய கற்கைப் பிரிவில் பிரசித்திப்பெற்ற கல்லூரியாக மாற்றி அதை மேலோங்கச் செய்தார்கள்.
O.L.M. மாக்கான் மார்கார் குடும்பத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான பங்களிப்பு
BIA கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹூமா ஆமினா உம்மாவின் மறைவைத் தொடர்ந்து, O.L.M மாக்கான் மார்க்கார் குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறை உறுப்பினர்கள் இக்கல்லூரியின் நிர்வாகம் மற்றும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
O.L.M மாக்கான் மார்க்கார் குடும்பத்தின் உறுப்பினர்கள் இக்கல்லூரியின் ஸ்தாபகரின் சிறந்த அனுகுமறைகளையும் நல்ல நோக்கங்களையும் தொடர்ந்து நிலைநிறுத்த உறுதியளித்துள்ளனர். தற்போதைய தலைமை வகிக்கும் நிர்வாகிகள், மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன், தங்கள் முன்னோர்கள் விரும்பியபடி கல்லூரி தொடர்ந்து செழிப்பாக வளர்ந்து வருவதை தங்கள் இலக்காக கருதுகின்றனர்.
குடும்பத்தின் முந்தைய தலைமுறை உறுப்பினர்கள் இக்கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கிய சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் மற்றும் தற்போதைய நிர்வாகிகளால் செய்யப்படுகின்ற நிதி பங்களிப்புகள் மூலம் இக்கல்லூரிக்காக செலவளிக்கப்படுகிறது. இந்த நிதியானது இக்கல்லூரியின் அன்றாடச் செயற்பாடுகளுக்கும், இலவசக் கல்வி வழங்குவதற்கும், பணியாளர்களின் நலன், கல்லூரி மற்றும் விடுதி கட்டிடங்களின் புனர்நிர்மாணம் செய்வதற்கான செலவு ஆகியவற்றுடன் தொடர்புடைய செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
